ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றும் பஸ்கள் இன்று முதல் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் - திலும் அமுனுகம

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றும் பஸ்கள் இன்று முதல் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் - திலும் அமுனுகம

ஆசன எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் இன்று முதல் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித் துள்ளார்.

 இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

குறித்த பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை மறு அறிவித்தல் வரை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 

அவ்வாறு ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் இன்று முதல் முன்னெடுக்கப் படவுள்ளன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.