வரலாற்றில் இன்று பிப்ரவரி 09.2022

 வரலாற்றில் இன்று பிப்ரவரி 09.2022


பெப்ரவரி 9  கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன. 

இன்றைய தின நிகழ்வுகள்

474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.[1]

1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.[2]

1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[4]

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.

1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.

1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.

1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1904 – உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.

1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.

1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1951 – கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.

1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.

1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.

1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர்.

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

இன்றைய தின பிறப்புகள்

1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க மெயுஇயலாளர், எழுத்தாளர் (இ. 1809)

1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841)

1910 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1976)

1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989)

1929 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (இ. 2014)

1934 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (இ. 1969)

1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்.

1943 – ஜோசப் ஸ்டிக்லிட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்.

1944 – ஆலிஸ் வாக்கர், அமெரிக்க எழுத்தாளர்.

1945 – இயோசினோரி ஓசூமி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளர்

1950 – ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (இ. 2005)

1964 – ம. ஆ. சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்.

1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாளர்.

1981 – டாம் ஹிடில்ஸ்டன், ஆங்கிலேய நடிகர்.

இன்றைய தின இறப்புகள்

1881 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1821)

1966 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (பி. 1906)

1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1901)

1981 – எம். சி. சாக்ளா, இந்திய அரசியல்வாதி (பி. 1900)

1984 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918)

1986 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைவாதி (பி. 1916)

1987 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1894)

1989 – ஒசாமு தெசூகா, சப்பானிய கேலிப்பட ஓவியர் (பி. 1928)

1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936)

2001 – சாவி, எழுத்தாளர் (பி. 1916)

2008 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர் (பி. 1914)

2010 – செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்

2011 – வ. விஜயபாஸ்கரன், தமிழக எழுத்தாளர் (பி. 1926)

2011 – எஸ். வி. ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1936)

2012 – ஹெப்சிபா ஜேசுதாசன், புதின எழுத்தாளர். (பி. 1925)

2012 – எஸ். தட்சிணாமூர்த்தி, இந்திய இசைக்கலைஞர் (பி. 1921)

2013 – அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி.

2013 – மலர் மன்னன், பத்திரிகையாளர், எழுத்தாளர்.

2016 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)


 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.