தன்னம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவோம்!

தன்னம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவோம்!


சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும்.

ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைத்து ஏமாறுவது, சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம், மன அழுத்தம், பயப்பட வைக்கும் சூழல், பெற்றோரிடம் இருந்து வரும் மறுப்பு போன்ற பல காரணங்களால் பதற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரியான முறையில் கையாண்டால் எளிதாக குணப்படுத்த முடியும். அதற்கான சில வழிகள்…

சில பெற்றோர்கள் அதிக கண்டிப்போடு நடந்து கொள்வார்கள். இதனால் பிள்ளைகளிடம் சிந்திக்கும் திறன் குறைந்து எப்போதும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.

உணவு முதல் உடைகள் வரை அனைத்திலும் பிள்ளைகளின் விருப்பத்தையே முன்னிறுத்த வேண்டும். இந்த மாற்றத்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும்.

பதற்ற உணர்வு நீடிக்கும் போது சிலர் திறமை இருந்தும் வெளிப்படுத்துவதில் தயக்கத்துடன் இருப்பார்கள்.

பதற்றத்துடன் பயமும் அதிகரிக்கும் போது எதையும் கூர்ந்து கவனிக்க முடியாக நிலை ஏற்படும்.

பள்ளியில் நடத்தும் பாடங்களில் ஆர்வம் குறையும். இதை தவிர்ப்பதற்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுமாறு பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.

வளர் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளை அவர்களுக்கு தெரியாமல் கவனிப்பது அவசியம். வழக்கமான செயல்களில் மாறுபாடு தெரிந்தால் இயல்பாக பேசி பிரச்சனையின் தீவிரத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதற்கான தீர்வை கூறி அவர்களே செயல்படுத்தும் படி தேவையான ஆலோசனையை வழங்கலாம். இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு புரோட்டீன், வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவு அவசியமாகும்.

அதேபோல் போதுமான உறக்கமும் தேவை. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனதில் புத்துணர்வை ஏற்படுத்த முடியும்.

வளர் இளம் பருவத்தில் இருப்பவர்கள் ஒன்றின் மீது நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது. எனவே இடையிடையே மனதை இலகுவாக்கும் பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

செல்ல பிராணிகளைக் குளிக்க வைப்பது, நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது என தினம் ஒரு பயிற்சியில் ஈடுபடுவது மனதை இலகுவாக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.