ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு விதித்த அதிரடி தடை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு விதித்த அதிரடி தடை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதிப்பிக்கப்பட்டுள்ள எழுத்து மூல ஆவணம் குறித்து எதிர்வரும் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் உரிமைகளை ஏற்றுக்கொள்வது, இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள தாமதம் தமது அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஒன்று தீர்மானத்திற்கு இணை அணுசரவை வழங்குவதில் இருந்து விலகி, இரண்டு வருடங்கள் கடந்தபோதிலும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான திட்டமிடலை இலங்கை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமை வகிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கைக்கு இலங்கை பிரதிநிதிகள் குழு பதிலளிக்கவுள்ளது. 

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/90MWg1Q
https://ift.tt/81u7IbF

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.