சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(02) பணிப்புறக்கணிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(02) பணிப்புறக்கணிப்பு!

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகான், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. 

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, இன்று காலை 8 மணிக்கு, சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர். 

வைத்தியர்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

 இதன்காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டமையால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

 இந்த நிலையில், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை கைவிட்டிருந்தனர். 

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க, சுகாதார அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

தீர்வு வழங்குவதற்காக, சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இது 65 ஆயிரம் சுகாதார உத்தியோகத்தர்களின் பிரச்சினையாகும். 

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு, அங்கொடை மனநல மருத்துவமனை மற்றும் மத்திய குருதி வங்கி ஆகியற்றிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற மாட்டாது என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/zJ1pokZ
https://ift.tt/BDF2UJN

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.