கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

திருகோணமலை - கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(29) முதல் ஜூலை 10ஆம் திகதி வரையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையில் இன்று(28) சூம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என நேற்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அத்தோடு, நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் கந்தளாய் பிரதேசத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் எரிபொருள் நெருக்கடியை சந்தித்து வருவதால், பாடசாலைகளை சீராக நடாத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இந்தகூட்டத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் எடுத்துக்கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/LPxfTam https://ift.tt/1CJzHPS 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/laFKIUP 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/3BUGjmc 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/tUMhjpP
https://ift.tt/fUJSgqj

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.