வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி பேரின் தகவல்களை விற்ற ஹேக்கர்!



இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து,எகிப்து ஆகிய நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளதாக தகவல்

இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி செல்போன் எண்களை விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் நியூஸ் என்ற நிறுவனம் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து,எகிப்து ஆகிய நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 48 கோடியே 70 லட்சம் பேரின் செல்போன் எண்கள் விற்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி எங்களிடம் உணவு ஆர்டர் செய்ய முடியாது... இந்தியாவில் அமேசான் அதிரடி முடிவு!

ஒட்டுமொத்த அமெரிக்க பயன்பாட்டாளர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 220 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலிபாதுகாப்பானது என மெட்டா நிறுவனம் கூறி வரும் நிலையில், இந்த ஹேக்கிங் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.