இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி தலைவர் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9 சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார்.

கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.

நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர். அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.