பேருந்து மோதியதில் நபர் பலி - கடவத்தையில் சம்பவம்!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கடவத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (21) இடம்பெற்ற இவ் விபத்தில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காவல்துறை அறிக்கையில் மேலும், " கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கடவத்த, பண்டாரவத்த சந்தியில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ் முன்னால் பயணித்த உந்துருளியில் மோதியுள்ளது.   

இதன் போது காயமடைந்த உந்துருளி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்"எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.