புதிய கடவுச்சீட்டு பெற முற்கூட்டியே நேரம் ஒதுக்கியவர்ளுக்கு முக்கிய தகவல்.

 

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியவர்களுக்கும் புதிய விலைகள் பொருந்தும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பெருமளவு மக்கள் கடவுச்சீட்டை பெற நேரத்தை ஒதுக்கியுள்ளனர். எனினும் அவர்களுக்கும் இந்த புதிய கட்டணமே அறவிடப்படும். கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற செய்திக்கு பின்னர் பலரும் நேரம் ஓதுக்கிக் கொண்டுள்ளனர்.

எனினும் இன்று முதல் வழங்கப்படும் கடவுசீட்டுகள் அனைத்திற்கும் கட்டணம் அறவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள மேலதிகமாக ஐயாயிரம் ரூபா செல்லப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.