மாணவனை தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியை!

வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல அரச பாடசாலையில் தனது பிரத்தியேக வகுப்புக்கு வராத மாணவனை தும்புத்தடியால் ஆசிரியை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 5இல் குறித்த மாணவன் கல்வி பயின்று வருவதுடன் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையிலும் தோற்றவுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை தனது பிரத்தியேக வகுப்புக்கு வருமாறு ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவன் அவரின் பிரத்தியேக வகுப்புக்குச் செல்லவில்லை. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மாணவன் மீது தும்புத்தடியால் ஆசிரியை தாக்கியுள்ளதாகவும் இதன் காரணமாக மாணவனின் உடலில் தழும்புகள் உள்ளதாகவும் மாணவனின் எதிர்கால கல்வி பாதிப்புக்குள்ளாகும் என்பதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவில்லை எனவும் மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.