முட்டையின் இறுதி விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

முட்டையொன்றை விற்பனை செய்யக்கூடிய இறுதி விலையை கணக்கிட்டு, ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் கோழித் தீவனத்தை இறக்குமதி செய்வது தொடர்பான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை கருத்தில் கொண்டு முட்டையின் விலையை கணக்கிடுமாறு, கோப் குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வா, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில், ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற பொது நிதி தொடர்பான குழுவில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.

இதேவேளை, கெசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் குறித்தும் குழு விவாதித்துள்ளது, இதன்போது கெசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாததால் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும், குழு கவனம் செலுத்தியது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.