ஆடை மற்றும் அலங்கார பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்.

இலங்கையில் ஆடை மற்றும் அலங்கார பொருட்களின் விலைகள் பிற்காலத்தில் குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆடை மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாட்டை கடந்த 23ம் திகதியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் அவ்வகை பொருட்களுக்கான விலைகள் கணிசமாக குறைவடையும் என்று துறைசார்ந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இறக்குமதி செய்வதற்கான நாணயக்கடிதங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பிரச்சினைத் தீர்க்கப்பட்டால் ஆடை, வாசனைத் திரவியங்கள் அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் கணிசமாக குறைவடையும் என்றும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.