இருவேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள்.

சூரியவெவ மற்றும் ஊருபொக்க பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஊருபொக்க கடவலகம பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையானதை அடுத்து, இறந்தவரின் மனைவியின் முந்தைய திருமணத்தைச் சேர்ந்த மகன் உட்பட பலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 51 வயதுடைய பெரலபனதர கடவலகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 32, 30 மற்றும் 19 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.