நாயால் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!

பனாமுர-எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பகுதியில் காவல்துறை அதிகாரியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

பனாமுர காவல்துறை குழுவொன்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர், காவல்நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

இதன்போது காவல்துறை அதிகாரிகள் இருவர் உந்துருளியில் வந்தபோது எதிரே நாயொன்று வீதிக்கு குறுக்காக பாய்ந்துள்ளது. இதனால் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் காயமடைந்த சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (22) ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பனாமுற காவல்நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய, பன்னன்விலயாய-கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய எஸ்.ஷாந்த என்ற அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றைய அதிகாரி எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.