நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்

நாட்டில் தீவிரமடையும் இன்புளுவன்சா நோய் தொற்று அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே நோய் தொற்றின் அறிகுறியாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த இன்புளுவன்சா நோய் தொற்று கோவிட் -19 நோயுடன் ஒப்பிடுகையில், நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நோய் நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.