கொழும்புக்கு வந்த அதிசொகுசு பயணிகள் கப்பல்!

அதிசொகுசு பயணிகள் கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது. Viking Mars என்ற கப்பலே இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கடற்கரைப் பயணத்துக்கான அதிக பயணக் கப்பல்களைக் கையாளும் முன்னணி இலக்கு நிர்வாக நிறுவனமான Aitken Spence Travels, அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான வைகிங் மார்ஸ், தொற்றுநோய்க்குப் 900 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் வந்த பயணிகளின் உல்லாசப் பயணங்களின் போது கண்டி, பின்னவெல, காலி நகரப் பயணங்கள், கொழும்பில் நடைப் பயணம், முத்துராஜவெல மற்றும் மடு ஆற்றில் படகுச் சுற்றுலா, விவசாயக் கிராமக் கருத்து, துக்-துக் சுற்றுப்பயணங்கள், கலாசார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைச் சுற்றுலா போன்றவற்றைப் பார்வையிடுவார்கள்.

"எங்கள் ஆற்றல் மிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு கடந்த 12 மாதங்களில் இந்த பயண அழைப்புகளைப் பெற மிகவும் கடினமாக உழைத்ததாக Aitken Spence Travels இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.