Facebook பயனாளர்கள் கவனத்திற்கு.. டிசம்பர் 1 முதல் உங்கள் அக்கவுண்ட்டில் இது இருக்காது.

Facebook செயலியில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்கள்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் செயலியை நாட்டில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனாளர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் கடவுச்சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவு செய்ய வேண்டாம் என இந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பயனாளர்கள் தங்களின் தேவையற்ற தகவல்களை நீக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. அதாவது முன்னதாக பயனாளர் கணக்கை தொடங்குவதற்கு நீண்ட படிவத்தை நிரப்பிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இதில் Religious Views, Political Views, and Address உள்ளிட்ட தகவல்களை அகற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இத்தகவல்களை பயனாளர்களின் பக்கத்தில் இருந்து நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளது. அத்துடன் ஏற்கனவே இத்தகவல்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கு அகற்றுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்திவருவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.