எரிபொருளுக்கான QR நடைமுறை அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுகின்றதா?

 

QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிக்கப்படாமை தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ள விதத்தில் அவ்வாறான தீர்மானம் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை QR நடைமுறையின் கீழான எரிபொருள் விநியோகம் தொடரும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.