தாயை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன் - 60 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்காவில் பெற்ற தாயாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவனுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் தமது 44 வயதான தாயை VR headset வாங்கித்தராத காரணத்தால் கொலை செய்துள்ளான்.

இதனால் அவன் தற்போது 60 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்கிறான்.

இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், VR headset வாங்கித்தர மறுத்ததுடன், காலை 6 மணிக்கு தம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பியதால் கோபம் வந்தது எனவும், அதனால் துப்பாக்கியால் தாயாரை சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளான்.

முதலில், துப்பாக்கியுடன் விளையாடும் போது தவறுதலாக வெடித்தது என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது வேண்டுமென்றே கொலை செய்துள்ளதாக உறுதியாகியுள்ளது.

சிறுவன் தமது தாயாரை காயப்படுத்துவார் என்று தாம் ஒருபோதும் கருதவில்லை என உறவினர் ஒருவர் தமது அதிர்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

உளவியல் சிகிச்சை 

மேலும், கடந்த ஓராண்டாக சிறுவன் உளவியல் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வந்ததாகவும் கூறுகின்றார்.

அதேவேளை, தாம் கொலை செய்துள்ளது சிறுவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், அதனால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை, எதிர்காலம் என்பது தொடர்பில் புரிதல் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.