நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய 17 வயது மாணவன்.

வெள்ளம் காரணமாக நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுமியை 17 வயது பாடசாலை மாணவரொருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி பிபில, மெதகம 17 அஞ்சல் பகுதியில் தாயுடன் சென்ற சிறுமியொருவர் பெல்லன் ஓயாவின் பாலத்தை கடக்க முயன்ற வேளை திடீரென ஓடையில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மகளை காப்பாற்றுமாறு அருகிலிருந்தவர்களிடம் தாயார் கதறி அழுது உதவிகோரியுள்ளார். இருப்பினும் நீரோட்டம் அதிகளவு காணப்பட்டமையினால் பலர் நீரில் இறங்கி சிறுமியை காப்பாற்ற தயக்கம் காட்டியுள்ளனர்.

இதன்போது பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 17 வயதுடைய உயர்தர மாணவரொருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து 50 மீட்டருக்கு மேல் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை பலத்த முயற்சியினால் காப்பாற்றியுள்ளார்.

மேலும் இந்த மாணவனின் வீரச் செயலை பாராட்டி மொனராகலை அமுனேகந்துர தேசிய பாடசாலை சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவனுக்கு பாராட்டு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.