இலங்கை மக்களை ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் 3 நோய்கள்.

 

𝑰𝑻𝑴 ✍️ நாட்டில் இருமல் மற்றும் சளி பரவுவதற்கு வைரஸ் மற்றும் டெங்கு போன்ற காரணங்கள் இருப்பதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ தற்போதைய மோசமான குளிர் காலநிலை வைரஸ் தொற்று, கொரோனா தொற்று மற்றும் அதிகரித்துள்ள டெங்கு நிலை காரணமாக அதிகமான நோயாளிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ கடந்த வாரம் மாத்திரம் சுமார் 40 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜேவிக்ரம தெரிவித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ டிசம்பர் மாதத்தின் முதல் சில வாரங்களில் கொழும்பு மாவட்டத்தில் 254 டெங்கு நோயாளர்களும், இம்மாதத்தில் நாடு முழுவதும் 1323 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக மருத்துவரைப் பார்ப்பது சரியான நடவடிக்கை என விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.