தாதியின் கையை வெட்டி கைப்பையை திருடிய நபர்கள்.

தாதி ஒருவர் கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவருக்கே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதனை நிட்டம்புவ தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த தாதி வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நிட்டம்புவ தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாதியின் கணவர் பேலியகொட தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான காவல் பரிசோதகர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் நிட்டம்புவ காவல் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.