இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. மக்களே அவதானம்!

நாட்டில் தொடரும் சீராற்ற காலநிலை காரணமாக இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையாக இது விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, இரத்தினபுரி மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவு, கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, காலி நாகொட இங்கிரிய மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இந்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.