முட்டை கொள்வனவு தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.எம்.சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் தற்போது முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

செயற்கையாக தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் குறிப்பாக மேல் மாகாணத்தில் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளால் முட்டைக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் முட்டை விலையை அதிகரிக்கும் என்று சில வியாபாரிகள் தற்போது வேண்டுமென்றே முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

தற்போது கோழிப்பண்ணையாளர்களால் போதுமான அளவு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் எதிர்வரும் மாதங்களில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படும்.

50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் கட்டுப்பாட்டு விலையை விடக் குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, சில சூப்பர் மார்க்கெட்டுகளில் முட்டை விலை 65 ரூபா எனவும், பேக்கிங் நோக்கங்களுக்காக 15 ரூபா வசூலிக்கப்படுகிறது. எனவே பொது மக்கள் நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது.”என கூறியுள்ளார்  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.