பஸ்ஸின் சாரதி திடீர் மாரப்படைப்பினால் மரணம்.

𝑰𝑻𝑴 ✍️ பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தான் செலுத்திச் சென்ற பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த பஸ் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வீட்டில் மோதியுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ கொட்டாவ பிலியந்தலை 342 பஸ் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பஸ், கொட்டாவ பஸ் நிலையத்துக்கு முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக இன்று (20) அதிகாலை 5.45 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ அப்போது சாரதியினால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகிய பஸ் அருகிலிருந்த மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வீட்டின் முன்பக்கத்தை மோதி நின்றுள்ளது இந்த நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி, சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ கபில பெரேரா (54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.