நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக புகையிலைக்கு தடை.

 

நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக புகையிலைக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் புகையிலை 

இந்தநிலையில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவரும், சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்க முடியாது என்று சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை வாங்கக்கூடியவர்களின் எண்ணிக்கை குறையும். அத்துடன் 2050ல், 40 வயது நிரம்பியவர்கள் சிகரெட் வாங்க முடியாத அளவில் இருப்பார்கள்.

இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால் நாடாளுமன்றில் உரையாற்றியபோது, இது புகை இல்லாத எதிர்காலத்தை நோக்கிய ஒரு படி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நியூசிலாந்தின் புகைபிடிக்கும் வீதம் ஏற்கனவே வரலாற்றில் மிகக் குறைந்த நிலையில் உள்ளது,

நவம்பரில் வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரத்தின்படி, வயது வந்தவர்களில் வெறும் 8 வீதத்தினர் மட்டுமே தினசரி புகைபிடிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இது 9.4 வீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டளவில் 5 வீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.