எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள்.

ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மாத்திரம் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டு பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை ஆயிரத்து தொண்ணூற்று நான்கு ஆக பதிவாகி உள்ளது.

வைரஸ் தொற்றுள்ள எலிகள், கால்நடைகள் மற்றும் நாய்களின் மலம் மற்றும் சிறுநீர் தண்ணீரில் கலப்பதன் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படலாம்.

விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் சேற்றில் இறங்குவதற்கு முன்னர் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க அரசாங்கம் வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது முக்கியம் எனவும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் பொது சுகாதார அதிகாரியிடம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மக்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.