கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளைஞன்.

இளைஞர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் தெஹிவளை அபோன்சு மாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் பலத்த காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை அபோன்சு மாவத்தையில் வசித்து வந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.