திருமணத்துக்குப் புறம்பான தவறான உறவுக்கு தடை.

திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை இந்தோனேஷிய நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.

புதிய சட்டத்தின்படி திருமணம் செய்யாமல் தம்பதியினர் இணைந்து வாழ்வதும் குற்றமாகும்.

திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியினருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அதேவேளை திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மேற்படி சட்டத்திருத்தங்களுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை இந்தோனேஷிய வர்த்தக சங்கங்களும் விமர்சித்துள்ளன.

சுற்றுலாத்துறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்பட்டது.

எனினும் இந்தோனேஷியாவின் சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.