முட்டைக்கான புதிய விலை

திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் அறிவிப்பின் பிரகாரம் புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என குறித்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) தீர்ப்பளித்தது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, முட்டைக்கான புதிய விலையை உடனடியாக நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.