மன நிறைவான வாழ்க்கை

'நீங்கள் மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா.?' இந்தக் கேள்வியை நீங்கள் எவரிடம் கேட்டாலும் அவர்கள் இல்லை என்று தான் பலரும் பதில் கூறுவார்கள்.

பணக்காரர்களும், புகழுடன் வாழ்பவர்களும் கூட மன நிறைவின்றியே வாழ்கின்றனர் என்பதே மெய்.

மன நிறைவு ஏன் யாருக்கும் வருவதில்லை...? எல்லோரும், பணமும், புகழும் மன நிறைவைத் தரும் என்று நம்பி அவைகளைத் துரத்துகின்றனர்.

அவை கிடைத்தப் பின் அவர்கள் மனம் அதிக பணத்திற்கும் , அதிக புகழுக்கும் ஆசைப்படுகிறது.

பணம் படைத்தவர்கள் பணத்தைப் பாதுகாப்பதற்காகவும், தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான் அல்லல்படுகின்றனர்.

அன்பான குடும்பம், நோயற்ற உடல்,  நெருங்கிய நண்பர்கள், உளமார்ந்து நேசிக்கும் உறவினர்கள், என  இவை யாவும் உங்களுக்கு மன நிறைவைத் தரலாம்.

உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்கும் பணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.

ஆனால், இந்த மகிழ்ச்சி உண்மையும் அல்ல. நிரந்தரமும் அல்ல.

சரி!, எது மன நிறைவான வாழ்க்கையைத் தரும்...? எந்தச் செயல் உங்களுக்கு ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தையையும், நோயில்லா உடலைத் தருகிறதோ அதுவே நிறைவான வாழ்வு.

உங்களிடம் எந்தப் பண்பு மற்றவர்களை மகிழ்வுறச் செய்கிறதோ அதுவே உங்களுக்கு நிறைவான வாழ்வு.

நிறைவு ஏன்பது ஒரு மனநிலை. ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும்,  அறுதி இட்டுக் கூற இயலாது.

அவரவர்களே அவர்களுக்கு நிறைவை எந்தப் பண்பு கொடுக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இருப்பதை விட்டு இல்லாததைத் தேடும் வாழ்க்கையாக நீங்கள் இருக்கக் கூடாது, உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்...

உங்கள் வாழ்க்கையை நீங்களே இனிமையாக்க கற்றுக் கொள்ள வேண்டும், பிறருடைய வாழ்க்கையை ஒப்பிடக் கூடாது.

ஒரு யாசகன் மற்றொரு யாசகனைத் தான் ஒப்பிட்டுப் பொறாமை கொள்கிறான். ஒரு செல்வந்தனை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவது இல்லை.

பொறாமை இல்லா வாழ்வே மன மகிழ்வைத் தரும்.

ஆம் நண்பர்களே...!

போதும் என்ற மனம் படைத்தவர்களும், இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர்கள் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை பெறவியலும்...

அவர்கள் வாழ்க்கை தான் மன நிறைவான வாழ்க்கையாக இருக்கும்...

பணம் சம்பாதியுங்கள். அதே நேரம் இருப்பதை வைத்து திருப்தியாக வாழும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். அந்த வாழ்க்கையே உங்களுக்கு மன நிறைவைத் தரும்...

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.