இரவு நேர சிந்தனை.

நம்முடைய வாழ்க்கை என்பது

வானத்தில் எப்பொழுதும்

பிரகாசித்துக் கொண்டே இருக்கும் சூரியனைப் போன்றது அல்ல

தோன்றி மறையும் நிலவைப் போன்றது

அதில் வளர்பிறையும் உண்டு

தேய்பிறையும் உண்டு.

சில நாட்கள் இல்லாமல் போனாலும் மறுநாளில் மீண்டும் வரும்.

விடியாத இரவென்று எதுவும் இல்லை முடியாத துயரென்று எதுவும் இல்லை.

வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை. வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை.

இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்று உணர்ந்து கொள்ளுங்கள்

அதனால் உங்களுக்காக இருக்கின்ற நொடிகளை நீங்களே இன்பமாக்கிக் கொள்ளுங்கள்

இந்த வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.