முட்டை இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு.

முட்டை இறக்குமதிக்கான சர்வதேச அளவில் டெண்டர் கோரும் பணி இன்று தொடங்கும் என இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முட்டை இறக்குமதிக்கான டெண்டர் கோரல், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல் மற்றும் பொருத்தமான இறக்குமதியாளர்கள் தேர்வு ஆகியவை இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, சந்தைக்கு தேவையான முட்டைகளின் அளவை அரசு முடிவு செய்து, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு தெரிவிக்க உள்ளது.

 அதன்படி, இந்த நாட்டுக்கு தேவையான முட்டைகளின் எண்ணிக்கையை இந்த வாரத்திற்குள் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டினட் 03 மாகாணங்களை மையப்படுத்தி இன்று முட்டை 53 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லொறிகள் மூலம் பல பிரதேசங்களுக்கு 800,000 முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.