அமைதியாய் இருக்கும் மனிதனிடம் மொத்த பிரபஞ்சமும் அடங்கிவிடும்.

சுயநலம் என்பது மிகச்சிறிய உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

பசுவின் மடியை கொசு கடித்தாலும் அது பாலைக் குடிப்பதில்லை, இரத்தத்தைத்தான் குடிக்கும்.

ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் சரியான பாடத்தைக் கற்பிக்கும்.

சகிப்புத்தன்மை என்பது நம் பலவீனத்தின் அறிகுறி அல்ல. அது நம் மனவலிமையின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது. பலவீனத்தின் உச்சக்கட்டம் என்பது ஒருவரின் பழியுணர்ச்சியிலும், பொறாமையிலும் தான் தெரியவரும்.

சகிப்புத்தன்மை என்பது ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல், பிடிக்காமல், ஒதுங்கி போகும் ஒன்றல்ல. நம்மிடம் ஒத்துப்போகாத ஒருவரிடம், கண்ணியமாய் நாம் நடந்துகொள்ளும் முறைதான் அது.

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

புன்னகை - பிரச்சனைகள் வருவதை தள்ளி போடும்..!!

மௌனம் - பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த வாய்தான் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது....

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும்தான் அதிகமாக வருகிறது என நினைப்பவர்கள் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.