குப்பை வண்டி விதி’ தெரியுமா?"

சில மனிதர்கள் மனம் நிறைய குப்பைகளை, அழுக்குகளை சேர்த்து வைத்து இருக்கிறார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்து இருக்கும்..

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்.

அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டி விட்டு நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நாம் பணிபுரியும் இடத்திலோ, அல்லது வீட்டிலோ, தெருவில் போகும் மற்றவர்களிடமோ நாம் கொட்டக் கூடாது..

வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்தக் குப்பைகளை தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்..

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது, ஒரு புன்னைகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள்.

ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. ஆகையால் புகைவண்டி நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்சி ஒன்றைப் பிடித்து உடனே ரயில்வே நிலையம் செல்லுமாறு ஓட்டுனரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது, இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பியது.

ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்சி ஓட்டுனர், உடனே பிரேக்கைப் போட்டு சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்...

அந்தக் காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களைக் கன்னாபின்னா என்று நா கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு டாட்டா காட்டுவது போல கைகளைக் காட்டுகிறார்...

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரைப் பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஓட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை.

ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு திட்டு திட்டி இருக்கலாமே… அவன் மேல தப்பு வைத்துக் கொண்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுனரிடம் கேட்கிறார்...

அதற்கு டாக்சி ஓட்டுனர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர்.. பல மனிதர்கள் இப்படித் தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்..

அவர்களின் கோபத்தை, விரக்தியை யாரவது மேல் இறக்கி வைக்க வேண்டும். இன்று நான் கிடைத்தேன், அதனால் தான் என் மீது இறக்கி வைத்து உள்ளார் என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்து விட்டார்.

ஆம்..நண்பர்களே

நம்மை சரியாக நடந்து கொள்வர்களை நேசிப்போம். அப்படி நடந்து கொள்ளாதவர்களிடம் அவர்கள் மீது அனுதாபம் கொள்வோம்..

இது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. ஆம்..வாழ்க்கை 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதைப் பொருத்தது..               .             

90% நாம் எப்படி வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தது.                                                     

உடுமலை     சு.தண்டபாணி 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.