இல்லாததை நினைத்து.

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்குப் பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம்...

அத்தோடு, இல்லாததை நினைத்துப் பல நேரங்களில் வருந்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்...

இருப்பதை வைத்து நிறைவு அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ!,  அவரே நோயற்ற நிலையுடன் நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்.

அன்று தென்றல் ஒரு பாறையைக் கடந்துப் போனது. அது போகும் போது அந்தப் பாறையின் மேல் ஒரு சிறிய விதை கிடந்ததைக் கண்டது...

உடனே தென்றல், அந்த விதையிடம், நீ இருக்கிற இடத்தைக் கண்டாயா, அது ஒரு பாறை. அங்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது...!

அதனால்!, என்னோடு வந்து விடு, நான் உன்னைப் பாதுகாப்பாக ஒரு நல்ல நிலத்தில் விட்டுச் செல்கிறேன். நீ வளர்ந்து பெரிய மரமாகி விடுவாய் எனக் கூறியது...

அதற்கு அந்த விதை, பரவாயில்லை, நீ உனது வழியில் செல். நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எப்படியாவது உயிர் வாழ முயற்சி எடுக்கிறேன் என்று கூறி, தென்றலோடு செல்ல மறுத்து விட்டது...

தென்றலும் தன் வழியே சென்றது. ஆறுமாதம் சென்று அந்தத் தென்றல் அதே வழியில் வந்தது. அந்த இடத்தில் ஒரு மரத்தைப் பார்த்ததும் தென்றலுக்கு வியப்பு...!

நீ அந்த விதை தானே!, ஆறு மாத காலத்திற்குள் நீ எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கிறாய் என்று தென்றல் கேட்டது...

அதற்கு அந்த விதை, நான் இந்த இடத்தில் கிடைத்த ஒரு சிறிய மழைத்துளியைப் பயன்படுத்தி, என் வேரை ஊன்றினேன். பின்னர் என் வேரைப் பரப்பி இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்திருக்கிறேன்...

ஆக!, நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல., எனது மனநிலை எப்படி இருக்கின்றது என்பது தானே முக்கியம். அதனால் தான் இன்று இவ்வளவு பெரிய மரமாக நான் உருவாக முடிந்தது என்று சொன்னது...

ஆம் நண்பர்களே...!

நீங்கள் விரும்பக் கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிறைவையும், அமைதியையும் ஏற்படுத்தும்...!

கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது, நிம்மதியை இழக்கக் கூடிய சூழல்கள் ஏற்ப்படும். மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, காலை எழுந்ததும் நமக்கு இருப்பதை வைத்து மனநிறைவு கொள்ள வேண்டும்...!!

இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.