கேள்வி கேளுங்கள்...!"

மனித வாழ்கையைப் புரட்டிப் போட்ட ஒரு சில சொற்கள் உண்டு...! யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ!, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது வரலாறு மட்டுமல்ல நிகழ்கால உண்மையும் கூட...!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்த சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புதச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன...

இவைகளைப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருள்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்...

🔹உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்...

🔹உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்...

🔹செல்வத்தை வான்மழையெனக் கொட்டச் செய்த தொழில் மேதைகள்...

🔹உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்...

எனப் பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த சொற்களைப் பயன்படுத்தி  வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்...

ஆனால்!, நம்முடைய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இல்லை...

மாறாக, பரிகாரம் தேடி ஜோதிடர்களையும், கோவில்களையும் நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்...

உண்மையில் நாம் கலங்கும் போது இந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றோமா...?

நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை எனக் கேட்கிறோமா...?

நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக, நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது இந்த நிலை ஏன் என்று கேட்பதில்லை.

நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்கத் தவறுகிறோம், பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வதறியாது மலைத்து நிற்கிறோம்...

உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும், 

நிகழ்கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த சொற்கள் தான் இவைகள்...

ஏன்...? எதற்கு...? எப்படி...?  என்று கேள்வி கேட்க வேண்டும் என்று ஏதன்சு நாட்டு இளஞர்களைத் தட்டி எழுப்பினார் சாக்ரடீஸ்...!

எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார் தந்தை பெரியார்..

இதே சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூண்டுகிறார் வள்ளுவர்...!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பதறிவு . (- 423)

யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மைப் பொருள் அறிவதே அறிவாகும்...

ஆம் நண்பர்களே...!

 ஏன்...? எதற்கு...? எப்படி...? என்ற கேள்விகளை விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் ,

தலைவர்கள் கேட்டதால் தான், மனித குலம் ஆயிரம் ஆயிரம் கண்டுபிடிப்புகளைப்  பெற்றன...!

புரட்சிகள் வெடித்து உரிமைகள் கிடைத்தன...!

கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போனதும் மெய்ப்பொருள் காணும் பகுத்தறிவால் மட்டும் தான்...!

 மீண்டும்!, உங்கள் முன் எந்தக் கேள்விக்கும், சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள், மாறாக உரக்க உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்...!!

 ''ஏன்...? எப்படி...? எவ்வாறு...? எதனால்...? ''என்ற இந்த சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்...!!!

கேள்வி கேட்பது மூலமாகத் தான் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடியும். கேள்வி கேட்பது நம்முடைய பிறப்புரிமையாக இருக்க வேண்டும்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.