காலமும்...! நேரமும்...

"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே...!

வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும் போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தைப் பாருங்கள்.

அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்.

காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுதுபோக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.

"நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது.

உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் தன் நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.

ஆம் நண்பர்களே...!

🟡 உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள். உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்...!

🔴 எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப் போடும் பழக்கம் நல்லதல்ல. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. மனஉறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்...!!

⚫ நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்...!!!

🔘 நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம். மறுநாள் வேலைக்கு முதல்நாளே திட்டம் போடுங்கள், எந்த செயலையும் செய்ய ஒருமுறைக்கு, இருமுறை ஆலோசித்து முடிவெடுங்கள். எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் உறுதியாய் இருங்கள். இனி என்ன?, நாளை உங்களுடையது தான்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.