பொறுப்பும்...! கடமையும்...!

பொறுப்பு' மற்றும் 'கடமை' ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை.

''உண்மையில் பொறுப்பேற்பது என்றால்'' என்ன என்பதையும், ‘நான் பொறுப்பு’ என்ற உணர்வுடன் இருக்கும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது என்ன என்பதையும் பாருங்கள்..

பொதுவாகவே, 'பொறுப்பு' என்றால், சுமைகளைச் சுமப்பது என்று பொருளாக்கிக் கொள்பவர்கள் தான் அதிகம். கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்பு தான் மிச்சமாகும்.

பொறுப்பு என்பதைக் கடமை என்று தவறாக நினைப்பதால் தான் இப்படி சுமையாகத் தோன்றுகிறது.

ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டியை எடுத்து அதன் மீது அடையாளச் சிட்டை (லேபிள்) ஒட்டினார். அடுத்தவருக்குத் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைக் காலணியைப் போட்டார்.

அவரை அடுத்திருந்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார். அந்தப் பெட்டி விற்பனைப் பிரிவுக்கு செல்லும் வண்டியில் ஏற்றப்பட்டது..

“என்ன நடக்கிறது இங்கே...? செருப்புகளை சோடியாகத் தானே தயாரிக்கிறோம்...? ஏன் ஒற்றைச் செருப்பை மட்டும் பெட்டியில் போடுகிறீர்கள்...? என்று உரிமையாளர் பதறினார்.

“அய்யா!, இங்கே எந்தத் தொழிலாளரும் வாங்கிய சம்பளத்துக்குத் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. சிக்கல் என்னவென்றால், இடது கால் செருப்பை எடுத்துப் பெட்டியில் போட வேண்டியவர் மட்டும் இன்று விடுமுறை” என்று மேலாளரிடமிருந்து பதில் வந்தது..

தங்கள் கடமையிலிருந்து தவறாத தொழிலாளர்கள் இருந்தாலும், அந்த முதலாளியின் வியாபாரம் என்ன ஆகும்...? என்று ஆலோசித்துப் பாருங்கள்.

முழுமையாகப் பொறுப்பேற்காமல், கடமையைச் செய்வதாக மட்டுமே நினைத்து செயல்பட்டால், அது உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. விரைவிலேயே சலிப்பும், வெறுப்பும், விரக்தியும் கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள்.

யார் சொல்லியோ செய்யாமல், அதை நீங்களாகப் பொறுப்புடன் விரும்பிச் செய்தால் மட்டுமே இந்த வேதனை இருக்காது.

ஆம் நண்பர்களே...!

🟡 முதலில் பொறுப்பு என்பதைச் செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்...!

🔴 எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாகப் பொறுப்பு ஏற்கும்க்ஷபோது, “இது என்னுடையது” என்ற உணர்வு ஏற்படுகிறது...!!

⚫ எப்போது அதை உங்களுடையதாகவே உணர்ந்து விடுகிறீர்களோ!, அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.