கண்ணாடி ஜாடியில்

100 கருப்பு எறும்புகளையும் 100 சிவப்பு எறும்புகளையும் சேகரித்து ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால் 

எதுவும் நடக்காது. ஒரு பிரச்சினையும் வராது.

ஆனால், நீங்கள் அந்த ஜாடியை எடுத்து பலமாக குலுக்கி, ஒரு மேஜையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்....அடுத்தது என்ன நடக்கும்?

நீங்கள் குலுக்கிய வேகத்தில்,ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்றுத் தாக்கி....ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும்.

சிவப்பு கறுப்பை எதிரி என்றும் கருப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும். ஆனால் உண்மையில்....எதிரி 

அந்த ஜாடியை அசைத்தவர்....யார் என அதற்கு தெரியாது...தெரியவும் வாய்ப்பில்லை. 

அப்படி செய்தவர்...

ஹாயாக ஒரு நாற்காலியில் 

உட்கார்ந்துக் கொண்டு 

அந்த ஜாடியை ஆனந்தமாகப்

பார்த்துக்கொண்டிருப்பார்.

இந்த சிக்கலான சமுதாயத்திலும் 

இதே நிலைதான்.

ஆண்கள் Vs பெண்கள்

இடது Vs வலது

பணக்காரன் Vs ஏழை

நம்பிக்கை Vs அறிவியல்

எங்குப் பார்த்தாலும் வதந்திகள். வதந்திகள் மட்டும்தான்...

பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த விஷயத்திலும் 

பொது புத்தியோடு அணுக வேண்டாம்.

நாம் ஒருவருக்கொருவர்  சண்டையிடுவதற்கு முன், 

நம்மை நாமே 

ஒரு கேள்வியை 

கேட்டுக்கொள்ள வேண்டும்.

அந்த ஜாடியை உலுக்கியது யார்?

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.