ஆண்களே உஷார்.....இந்த பழக்கம் இருக்கா உங்களுக்கு?

ஒரு பெண்ணின் கருத்தரிப்புக்கு முக்கியமாக தேவைப்படுவது ஒரு ஆணின் விந்தணு தான். இதன் அளவு மற்றும் தரமானது முக்கியமாக கருதப்படுகின்றது.

மனித விந்தணுக்கள் தினசரி மில்லியன் கணக்கான உயிரணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.

மேலும் ஒரு சில ஆண்களுக்கு சில காரணங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து, மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது எனலாம். இதனால் சமூகத்தில் ஒரு ஆண் மட்டுமல்லாமல் பெண்ணும் அவமதிக்கப்படுகின்றார்.

ஆகவே வேறு எந்த காரணத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

📌வயது

வயதான ஒரு ஆணின் விந்தணுவானது அளவில் குறைவடைந்து, தரத்தில் குறைவடைந்தும் காணப்படும்.  

📌வாழ்க்கைமுறை மாற்றங்கள்

ஒரு ஆணின் வாழ்க்கை முறை மாற்றங்கள் விந்தணு நேரடியாக பாதிக்கும். மது அருந்துதல், போதை மருந்துகள் மற்றும் புகையிலை போன்ற செயற்பாடுகளில் இருப்பவர்களுக்கு விந்தணு குறைவடையும். 

📌மனஅழுத்த ஹார்மோன்கள்

இரத்ததில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருந்தால், அது உடலிற்கு தீங்கு விளைவிக்கும். னபோலிக் ஸ்டெராய்டுகள் விந்தணுக்களை சுருக்கி, விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். 

📌கதிர்வீச்சு

பாக்கெட்டில் செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதன் கதிர்வீச்சானது உடனடியாக விந்தணு உற்பத்திளை தடுக்கும்.  

மிக இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளை அதிக நேரத்துக்கு அணிய வேண்டாம்.

நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் என உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியைத் தினமும் 30-40 நிமிடங்கள் செய்திட விந்தணுக்கள் உற்பத்தியாகும். மேலும் எது சாப்பிடுவதால் அதிகரிக்கும் என்றும் தெரிந்துக்கொள்வோம். 

நீர்க்காய்கள், வெள்ளைப்பூசணி, சுரை, புடல், பீர்க்கு, நாட்டு வெண்டை, சௌ சௌ, முள்ளங்கி, அனைத்து கீரைகளும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கை கீரை சிறப்பானது.

கம்பு, ராகி, சோளம், எள், நிலக்கடலை, மாப்பிள்ளை சம்பா, வரகு, குதிரைவாலி, திணை, கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடலாம்.

இந்த முறைப்படி சாப்பிட்டு வந்தாலே விந்தணு உற்பத்தியானது அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.