ஒற்றுமையே வலிமை.

வீடோ,நாடோ அனைத்திலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்து விடும். 

இதனை,‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’ என்ற பழமொழி எடுத்து உரைக்கின்றது.

ஒன்று பட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.

கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். 

அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமாக இருந்தார் . ஒற்றுமையாக இருங்கள் என்று அவர் எவ்வளவு அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. 

ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்குப் பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை நடத்தினார் .

அவர் நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை எடுத்து வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். 

மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார். 

பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் கட்டியக் கம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.

பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். 

ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பேரும் நான்கு கம்புகளைப் போலத் தான். 

ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.

ஆம்.,நண்பர்களே..

எவ்வளவு சின்னப் பொருளானாலும், அவை ஒன்று சேரும் போது எந்த செயலையும் முடிப்பது எளிது.. 

அதைப் போலவே பல பேருடைய மனம்  ஒன்றுபட்டால், செய்ய முடியாதது எதுவுமில்லை. 

ஒன்றுபட்டு வாழ்வோம். 

வாழ்வில் உயர்ந்து நிற்போம் ..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.