'குறை காணல்''

ஒருவரை ஒருவர் ஏன் குறை பேசுகிறோம்? தன்னை விட ஒரு செயலை வேறு ஒருவர் திறமையாகச் செய்கிற போதும்,

ஒரு மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போதும், நம்மிடம் பொறாமைத்தனம் மிகுதியாகின்ற போதும், நாம் மற்றவர்களின் மேல்  பொறாமை கொண்டு அவதூறு பேசுகிறோம்.

மற்றவர்களின் குறையைக் காண்பது மிக எளிது.ஆனால் அந்தக் குறைகள் நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வது கடினம்.

பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விட தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள் என்பது நபியின் மொழி..

நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள் என்பது பைபிளின் கூற்று.

ஒரு பெரியவர் கையில் எப்போதும் ஒரு கண்ணாடி இருக்கும். அதை அடிக்கடி அதைப் பார்ப்பார்..பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்.

இதை வெகு நாட்களாக அருகில் வசித்து வந்த ஒரு இளைஞன் கவனித்துக் கொண்டு வந்தான்.

ஒரு நாள்,அந்தப் பெரியவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்..

பின்பு அவரிடம் அய்யா,,''நீங்கள் அடிக்கடி அந்தக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே, அது ஏதாவது அதிசயமான கண்ணாடியா? என்று வினவினான்.

அதற்கு அந்தப் பெரியவர்,, ''சாதாரணக் கண்ணாடி தான். ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!

பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?” என்றான்.

ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக் காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கண்ணாடியிடம் கற்க வேண்டும் !”

“எப்படி?”என்றான்.

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது.

அதேபோல்,    மற்றவர்களிடம், நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது..

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும்.

அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது.

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுவது இல்லை..இது கண்ணாடி தரும் பாடம்! என்றார்..

ஆம்.,தோழர்களே..

நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்கும் என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்..✍🏼🌹

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.