கல்வியும் சமூகமயமாக்கலும்

கல்வி செயல்முறையானது சமூக செயல்முறையாக விளங்கும் அம்சமாகும் என்பதே கல்வியும் சமூகமயமாக்கலினதும் அடிப்படைக் கருத்தாகும்.  அந்த வகையில் உலகில் எந்த ஒரு மனிதனும் தனிமைப்பட்டு வாழ்வதில்லை ஒவ்வொருவரும் சமூகமயமாகவே இணைந்து வாழ்கின்றனர். அந்த வகையில் "சமூகமயமாக்கல் " என்பது தனி மனிதன் ஒருவன் சமூகச் சூழலிலுள்ள நிலைமைக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிப்படுத்திக் கொள்வது ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தனிநபரானவன் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தான் எவ்வாறான செயல்களை செய்ய வேண்டும் என்பவற்றை அறிந்துக் கொள்ளும் முறையினையும் நாம் சமூகமயமாக்கல் என வரையறுத்துக் கூற முடியும். எனவே குறித்த ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ சமூகமயமாக்கப்படுவது அவசியமாகும்.

சமூகமயமாக்கலில் செல்வாக்கு செலுத்தும்  காரணிகளாக குடும்பம், பாடசாலை, ஒத்த வயதுக் குழுக்கள், பல்கலைக்கழகம், விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். அந்த வகையில் தனி நபர் ஒருவர் முதன் முதலில் அங்கத்துவம் பெறும் சமூக நிறுவனமாக குடும்பம் விளங்குகின்றது. குடும்பமானது சமூகத்தின் முதன்மையான அலகாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பாடசாலை பற்றிய அறிவினை பிள்ளை பெற முன்னர் குடும்பச் சூழலிலேயே தங்களுடைய முழு நாட்களையும் செலவிடுகின்றது. எனவே குடும்பத்தின் வாயிலாக சமூகத்திற்கேற்ற நடத்தை கோலங்களை பிள்ளை கற்றுக் கொள்கின்றது.

இதற்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் சமூகமயமாக்கல் முறையினை வெளிக்கொணரும் வகையில் அமையப்பெற்றுள்ளமையை காணலாம் குறிப்பாக குடும்ப சூழலில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பலதரப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்களோடு இணைந்து வாழக்கூடிய சூழலை பாடசாலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இது சமூகமயமாக்கத்திற்கான அடிப்படையாக அமையப்பெறுகின்றது மேலும் பாடசாலை ரீதியாக பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளும் ஆளிடைத் தொடர்புகளை வளர்க்கின்றன. இவ் ஆளிடைத் தொடர்புகள் பிள்ளைகள் சமூகத்தில் புதியதோர் சிந்தனையை உருவாக்க வழி காட்டும். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள், களப்பயணங்கள், குழு செயற்பாடுகள்,கலாச்சார நிகழ்வுகள்,விழாக்கள் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகள் மாணவர்களை சமூகத்தோடு பரஸ்பரத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கின்றது.

பாடசாலையின் பிரதான நோக்கமாக அமைவது கல்வி வழங்குவதாக இருந்தாலும் அதனையும் தாண்டி மாணவர்களிடத்தில் பாடசாலை கல்வியின் மூலமாக சமூகத்திற்குரிய தனித்துவ பண்புகளை வளர்த்தெடுப்பதாகவும் அமையப்பெறுகின்றது.

"ஜோன் டியுவி":-  பாடசாலை கல்வி பெரும் நிலையம் மட்டுமின்றி சமூகத்தின் ஒரு சிறு மாதிரி உருவமாகும்  என்கின்றார்.

ஆசிரியரின் வாயிலாக மாணவர்கள் எவ்வாறு சமூகமயமாக்கப்படுகின்றனர் என்பதை ஆராயும் போது ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நடந்து கொள்கின்ற முறையானது மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் மற்றும் ஆசிரியர் தான் கற்பிக்கும் பாடங்களில் சமூக ரீதியான பின்னணிகள் எவ்வாறு வலுப்பெற்று காணப்படுகின்றன என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வது அடிப்படை அம்சமாகும் எனவேதான் மாணவர்களுக்கு சமூக ரீதியான சிந்தனைகளை ஆசிரியர்கள் வழங்க முடியும். இது சமூகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.

ஆசிரியர் தனியார் வேறுபாடுகளை அறிவதன் ஊடாகவும் ஜனநாயக வழிமுறைகளை மாணவர்களுக்கு கற்பித்தல் ஊடாகவும் மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதன் ஊடாகவும் மாணவர்களை சமூக மயமாக்களுக்கு உட்படுத்தலாம்.

இவ்வாறு மாணவர்களை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்த பாடசாலை ரீதியாக செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டாலும் மாணவர்களை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்துவதில் ஒரு சில குறைபாடுகளும் பாடசாலை ரீதியாக காணப்படுகிறது.

பாடசாலையை பொருத்தவரை அனைத்து மாணவர்களிடத்திலும் சமூகமயமாக்கல் ஒத்தத் தன்மை வாய்ந்ததாக காணப்படுவதில்லை. அந்த வகையில் கற்றல் செயல்பாடுகளில் முதன்மையாக விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கின்றனர் ஏனைய மாணவர்களை கவனத்தில் கொள்ளும் பொருட்டு மந்தமாக உள்ளது.இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மாணவர்களிடத்தில் விரக்தி தன்மை ஏற்படும். இது சமூகமயமாக்கலு க்கு தடையாக காணப்படுகின்றது.

பாடசாலை ரீதியாக காணப்படும் நெறிபிறழ்வான நடத்தைகள், பேராசைகள், பொறாமை, தனிமைப்படுத்தப்படல்,கேலிக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் சமூகமயமாக்கல் ஏற்பட தடையாக காணப்படுகின்றன

அந்த வகையில் பாடசாலைகள் சமூகத்தில் சுதந்திரமாக செயற்பட முற்படும்போது சிறந்த சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்.இதற்கு அமைய கல்வியும் சமூகமயமாக்கலும் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே காணப்படுகின்ற இடைத்தொடர்புகளில் தங்கி உள்ளது.

மாணிக்கம் கெளசல்யா

2ம் வருட சிறப்புக் கற்கை

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.