உடல் பருமன் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும்.

 

அதிக உடல் பருமன் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

போதிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ கண்காணிப்பு மூலம் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மெடிந்தியா மருத்துவமனை சார்பில் ''ஜி.இ.கான்-23'' என்ற ஜீரண மண்டல மருத்துவ மாநாடு நடைபெற்றது.

அதில் உலக உயர் ரத்த அழுத்த அமைப்பின்(WHL) துணைத்தலைவர் டாக்டர் S.N நரசிங்கம், ''உடல்பருமனும் கல்லீரலும்'' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.

குடல் -இரைப்பை சார்ந்த நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மதுப்பழக்கம் இல்லாத பலருக்கும் கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.அதற்கு காரணம் உடல் பருமன்.

குறிப்பாக கல்லீரல் வீக்கத்துக்கு 40-50 சதவீதம் உடல் பருமனே காரணமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக அது கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதைக் கவனிக்க தவறினால் ஒரு கட்டத்தில் கல்லீரல் புற்றுநோயாக மாறக்கூடும். உரிய விழிப்புணர்வு இருந்தால் அதனை முன்கூட்டியே தடுக்கலாம் என்று அவர் கூறினார்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.