பதட்டமும், மனஉளைச்சலும்

உலகத்தையே வெற்றி கொள்ள நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.

சிறையில் மனஉளைச்சலில் அவரின் கடைசிக் காலம் கழிந்தது..அவரைப் பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்தார்.

“இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையைப் போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.

ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மனஉளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் செல்லவில்லை.

சிறிது கால்த்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட்டது.

அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.

அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.

ஆனால் நெப்போலியனிடம் குடிகொண்ட மனஉளைச்சலும் பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..

உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டைப் போடும் எலி.

அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால்.,அதற்கு ஏற்படும் மனஉளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு.,

அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்.

நேர்மன் கசின்ஸ்’ என்னும் அமெரிக்க நாவல் ஆசிரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி மனஉளைச்சல் இருந்து மீண்டும் வந்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் 

மேற்கொண்டேன்.

விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன்.

அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப்ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம் ? 

நாளடைவில் என் பதட்டமும், மன உளைச்சலும்  இருந்த இடம் சுவடே இல்லாமல் மறைந்து போனது என்றார்..

ஆம்.,நண்பர்களே.,

மாவீரனுக்கும் சரி சாதாரண எலிக்கும் சரி.

பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.

பதட்டமும், மனஉளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. 

அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.