வரலாற்றில் இன்று – 02.12.2023

டிசம்பர் 2  கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.

✅இன்றைய தின நிகழ்வுகள்

1755 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்தது.

1804 – பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.

1805 – நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.

1848 – முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.

1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.

1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.

1908 – பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.

1942 – மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.

1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.

1947 – பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.

1954 – சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.

1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

1971 – அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.

1971 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.

1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.

1976 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.

1980 – எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1988 – பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.

1990 – ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.

1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.

2005 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.

2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

✅ இன்றைய தின பிறப்புகள்

1885 – ஜார்ஜ் மினாட், அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)

1910 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்

1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.

1937 – மனோகர் ஜோஷி, இந்திய அரசியல்வாதி, 15வது மகாராட்டிரா முதல்வர்

1960 – சில்க் ஸ்மிதா, தென்னிந்திய நடிகை (இ. 1996)

1963 – நெப்போலியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

1978 – நெல்லி ஃபர்ட்டடோ, கனடிய நடிகை

1980 – டேரின் ரேண்டால், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 2013)

1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கப் பாடகி

1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)

✅ இன்றைய தின இறப்புகள்

1547 – எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)

1552 – புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)

1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)

1933 – ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்

2006 – வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)

2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)

✅ இன்றைய தின சிறப்பு நாள்

லாவோஸ் – தேசிய நாள்

ஐக்கிய அரபு அமீரகம் – தேசிய நாள் (1971)

ஐக்கிய நாடுகள் – அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.