குளிர்காலத்தில் வரும் தொண்டை வலி - நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்

உலகின் பல பகுதிகளின் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் தொண்டை வலி ஏற்படுகிறது.

விழுங்கும் போது வலி, இருமல் மற்றும் தொண்டையில் கீறல் போன்ற உணர்வு ஆகியவை இந்த நிலையின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

இதற்கு சிறந்த நிவாரணமாக இருப்பது வீட்டு வைத்தியங்கள் மாத்திரமே. ஆகவே வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்து எப்படி குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியில் இருந்து தப்பிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

நெல்லிக்காய் சாறு மற்றும் தேன்

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளது, மேலும் தேன் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும். 

எனவே, தேனை 15-20 மிலி நெல்லிக்காய் சாறுடன் கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வருவது நல்லது.

✅உப்பு மற்றும் மஞ்சள் நீர்

தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு கலந்து ஐந்து நிமிடங்களுக்கு பொருட்களை கொதிக்க வைக்கவும். 

பின் இந்த தண்ணீரில் ஒரு நாளைக்கு 3-4 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் உப்பு நீர் விழுங்கும் போது ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

இது தொண்டையில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

✅வெந்தயம்

ஒரு டீஸ்பூன் 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, சூடாகவோ அல்லது குளிராகவோ உட்கொள்ளவும். வெந்தய விதைகளின் பல ஆரோக்கிய நன்மைகள் இருகின்றன. தொண்டையில் இருக்கும் மோசமான பாக்டீரியாக்களை அழிக்கும்.  

✅துளசி

சளி மற்றும் இருமலுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க சிறந்த தேர்வு என்றால் அது துளசி தான். ஆகவே, 4-5 புதிய துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிக்கவும்.  

✅எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன. எனவே, வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வரவும். 

✅இலவங்கப்பட்டை ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. எனவே, ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு சிறிய குச்சியை 250 மில்லி தண்ணீரில் 5-8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

அடுத்து வடிகட்டி, சிறிது குளிர்ந்ததும், தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.