புற்றுநோயை தடுக்க உதவும் 25 உணவுகள்- மருத்துவரின் கூற்று
புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், புற்றுநோயை தடுக்க உதவும் 25 உணவுகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
✅புற்றுநோயை தடுக்க உதவும் உணவுகள்
👉பூண்டு
👉மஞ்சள்
👉ஆளி விதைகள்
👉ஆளி எண்ணெய்
👉புரோக்கோலி
👉எலுமிச்சை
👉கேரட்
👉சர்க்கரைவள்ளி கிழங்கு
👉காளான்
பழங்கள்
குறிப்பாக, காய்கனிகளில் தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள், மெழுகு போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
✅குறைந்தளவு பூச்சிமருந்து கலந்த உணவுகள்
👉ஸ்வீட்கார்ன்
👉அன்னாசி
👉பப்பாளி
👉மாம்பழம்
👉முட்டைகோஸ்
👉வெங்காயம்
👉காலிஃபிளவர்
✅அதிகளவு பூச்சிமருந்து கலந்த உணவுகள்
👉ஆப்பிள்
👉பேரிக்காய்
👉செர்ரி
👉திராட்சை
👉ஸ்ட்ராபெர்ரி
👉உருளைக்கிழங்கு
👉தக்காளி
👉கீரை
அதே போல் வாழைப்பழம், மாம்பழத்தை பெரும்பாலும் பூச்சிமருந்து கலந்தே பழுக்க வைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
வாழைப்பழங்களின் காம்பு பச்சை நிறத்திலும், பழம் மஞ்சள் நிறத்திலும் இருந்தால் அது பூச்சிமருந்து கலந்து பழுக்க வைக்கப்பட்ட பழம்.
வாழைப்பழம், அதன் காம்பு முழுக்க மஞ்சள் நிறத்தில் மற்றும் பழத்தின் மேல் கரும்புள்ளிகள் இருந்தால் அது இயற்கையாகவே பழுத்த பழம்.
மாம்பழங்கள் பூச்சிமருந்து கலந்து பழுக்க வைக்கப்பட்டால் பழத்தில் நறுமணம் இருக்காது. எனவே மாம்பழத்தை நுகர்ந்து பார்த்து வாங்கவேண்டும்.
✅பூச்சிமருந்து கலந்து காய்கனிகளை எப்படி சுத்தம் செய்வது?
01.சுத்தமான தண்ணீரில் 2- 3 முறை நன்கு கழுவி பயன்படுத்தலாம்.
02. தண்ணீரில் உப்பு கலந்து காய்கனிகளை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி பயன்படுத்தலாம்.
03. 1 கப் வினிகர் 4 கப் தண்ணீரில் கலந்து காய்கனிகளை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி பயன்படுத்தலாம்.
04. சோடா உப்பு கலந்த தண்ணீரில் 20 நிமிடம் காய்கனிகளை ஊறவைத்து கழுவி பயன்படுத்தலாம்.
05. 1 ஸ்பூன் எழுப்பிச்சை சாறு+ 2 ஸ்பூன் வினிகர்+ 1 கப் தண்ணீரில் காய்கனிகளை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி பயன்படுத்தலாம்.
06. கீரைகளை சுடுதண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் போடுவதனாலும் 80% பூச்சிமருந்துகள் அகற்றப்படுகிறது.
07. முடிந்தளவுக்கு காய்கனிகளில் உள்ள தோலை நீக்கியே பயன்படுத்துவது நல்லது.
08. சிகப்பு இறைச்சி மற்றும் வறுக்கப்பட்ட இறைச்சிகளை தவிர்த்தாலே புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.